திருமதி. சிவசுப்பிரமணியம் பங்கையற்செல்வம்

சிவசுப்பிரமணியம் பங்கையற்செல்வம்

மறைவு: 24 ஏப்ரல் 2024

யாழ். வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் பங்கையற்செல்வம் அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தனபாலசிங்கம் - மங்கையற்கரசி தம்பதியினரின் ஏக புத்திரியும்,

காலஞ்சென்ற பரமசாமி - யோகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

பூங்குழலி, காலஞ்சென்ற சிவச்செல்வம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பகீரதனின் அன்பு மாமியாரும்,

பகீரதி, பானுமதி, மதுமதி, இளவரசன், வளர்மதி, மதியழகன், சாம் ஜெயவேல், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஓவியா, அக்சரண் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2024 00:00)