Srimathi. Siyamala Sridharasharma
Deceased: 11 June 2025
யாழ். ஆவரங்கால் மேற்கு சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. சியாமளா சிறீதரசர்மா அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று மதியம் இறைபதம் அடைந்தார்.
அன்னார், ஆவரங்கால் சிவன் கோயில் முன்னாள் பிரதம குரு காலஞ்சென்ற வே.நடராஜகுருக்கள் - விஜயலட்சுமி அம்மா தம்பதியனரின் அன்பு மகளும், பருத்தித்துறை நா. சுப்பிரமணிய குருக்கள் - அமிர்தேஸ்வரி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணிய குருக்கள் சிறீதரசர்மா (தோப்பு போதிப்பிள்ளையார் பிரதம குரு) அவர்களின் அன்பு மனைவியும்,
சி.கவிஷ்ணா, சி.ஹரிமேனண், சி.கேதாரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
க.ஹம்ஸத்வனியின் அன்பு மாமியாரும்,
ஆருதியின் அன்பு பாட்டியும்,
சு.நித்தியானந்தி (அல்வாய்), ந.யோகானந்தேஸ்வரகுருக்கள் (ஆவரங்கால் சிவன் கோயில் பிரதம குரு), கி.சுபாசினி (வவுனியா), ஜ.காயத்திரி (ஆவரங்கால்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதாகரக்குருக்கள் (அல்வாய்), கிருஸ்ணகுமாரக்குருக்கள் (வவுனியா), ஜனார்த்தன குருக்கள் (ஆவரங்கால்), வத்சலா (ஆவரங்கால்), காலஞ்சென்ற பரமேஸ்வரி அம்மா, பத்மாநாத ஜயர், பாலாம்பிகை அம்மா, ஜெயலட்சுமி அம்மா, குணபூசணி அம்மா (மாவிட்டபுரம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-06-2025 வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
