திருமதி. சியாமளதேவி ஆறுமுகம்

சியாமளதேவி ஆறுமுகம்

தோற்றம்: 05 டிசம்பர் 1945 - மறைவு: 09 பெப்ரவரி 2025

யாழ். தெல்லிப்பழையைச் சேர்ந்த திருமதி. சியாமளதேவி ஆறுமுகம் அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அன்று  தனது 80ஆவது வயதில் தெல்லிப்பழையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசபிள்ளை - இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், 

காலஞ்சென்றவர்களான கதிரவேலு - வீரம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் கதிரவேலு (பிரபல சீமெந்து வர்த்தகர்) பாசமிகு மனைவியும்,

சுகந்தன்(89 O/L, 92 A/L0, கஜந்தன்( 91 O/L, 94 A/L, St,Patrick'College,பழைய மாணவன், பிரான்ஸ்), சுபாஜினி(93 O/L, 96 A/L உடுவில் மகளீர் கல்லூரி), யாழினி( 94 O/L, 97 A/L உடுவில் மகளீர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மா, பொன்னியம்மா, வேலு மற்றும் பொன்னம்பலம், சீதாலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஈஸ்வரன்( 89 O/L, 92 A/L யூனியன் கல்லூரி பழைய மாணவன் இலண்டன்), மாதவன், கிருஜா, குகேந்தினி (கவிதா), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

புவுஷனா, மதுஷிகன், கிரித்திக்சாய் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2025 05:00)