திரு. சோமசுந்தரம் சண்முகநாதன்
தோற்றம்: 14 மார்ச் 1956 - மறைவு: 14 ஜூலை 2026
யாழ். காரைநகர், வழுப்போடை களபூமியைப் பிறப்பிடமாகவும், இல- 26/17A, வித்தியார்த்த மாவத்தை, கலஹா, கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் சண்முகநாதன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - இராசபூபதி (கலஹா) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் - மீனாட்சி (கண்டி சண்முகம்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
அருள், சிந்துஜா, திருச்செந்தூரன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
சஷிகா, தாரக வீரசூரிய ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஷ்பராணி, உமாதேவி, காலஞ்சென்றவர்களான தர்மராஜா, செல்வராஜா, சற்குணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தட்சணாமூர்த்தி, சிவராஜா, சிவசண்முகதாஸ், காலஞ்சென்றவர்களான மாணிக்கசிவம், உமாதேவி, கௌரிதாஸ், நித்தியானந்தம், தர்மதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் கண்டி போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கண்டி (Kandy) மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் கண்டி மகியாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
