திருமதி. சோமசுந்தரம் சின்னத்தங்கம்
தோற்றம்: 17 மார்ச் 1927 - மறைவு: 03 செப்டம்பர் 2025
யாழ். புங்குடுதீவு தட்டயம்புலம்பதி 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா - Ajax இல் தற்போது வாழ்ந்தவருமான திருமதி. சோமசுந்தரம் சின்னத்தங்கம் அவர்கள் வளர்பிறை ஏகாதசி திதி ஆவணி 18ம் நாள் (செப்டெம்பர் 03) புதன்கிழமை மாலை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தெருவுச்சிவப்பி நாகனாதர் கந்தையா - செல்லாச்சி தம்பதியினரின் அருமை மகளும்,
அனுமார் கந்தையா - அபிராமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வே.க.சோமசுந்தரம் (சமாதான நீதவான் - முன்னாள் யாழ் மாவட்ட அபிவிருத்திசபை உறுப்பினர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, குமரேசு, முத்தம்மா, பொன்னம்மா, வள்ளியம்மை, சின்னத்துரை (முன்னாள் கொழும்பு ஆமர்வீதி வர்த்தகர்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வே.சுப்பையா, சின்னம்மா, சின்னத்தம்பி, (RMS) வல்லிபுரம், செல்லத்தம்பி, செல்லம்மா, சண்முகநாதியம்மா, V.K.குமாரசாமி, V.K.நல்லதம்பி (சிவகுரு), பராசக்தி, V.K.சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யசோதாதேவி, கிருஷ்ணகுமாரி, சச்சிதானந்தன்(ஓய்வு நிலை கிராமசேவை அலுவலர்), சதானந்தன், கதிர்காமநாதன்,பத்மாஜனதேவி, பேரின்பநாயகி, விவேகானந்தன், லிங்கேந்திரன், லெட்சுமிதேவி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் (கிராமசேவையாளர்), பாலசுப்பிரமணியம் மற்றும் மகாலெக்சுமி, அமிர்தராணி, கமலவதனி, தர்மராஜா, பத்மநாதன், ரஞ்சினி, லிங்கேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெகஜீவன், நிஜந்தி, பிரியதர்சினி, சசிகுமார், குகதர்சினி, சிவனேசன், ஜெகனாத், செந்தூரி, ஶ்ரீ கலா, பிரசன்னாத், மிதுலா, மனுவேல், சகானா அனிஸ்ரன், ஷாலினி, கவாஸ்கர், யுவானி, கபில்ஸ்கர், தர்ஷிகா, பானுஷன், பிரவீனா,காயத்திரி, கனிஷ்ரன், ரதுஷன், கஜானி, மதுரா, ரட்னேஸ், சஞ்சீவ், கார்த்திகா, ரஜீவ், நிதர்சன், நிதார்த்தன்,ரதிஜன், விதிஜன், கேசிந்த், ஆருஜா, ஆரபி, நிரோஜன்-நதீஷா, ராகுல்-யதுஷா, அட்சரா ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான V.S மணியம் (மலேசியா), காமாட்சி மற்றும் பஞ்சரெத்தினம் (கனடா) காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், கனகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
அக்கீரா, அர்ஜுன்,சபீனா, சயானா,அவிகா, அட்விகா, றீனா, அலிசா, பிறைன், மிகான், லியானா, மிலான், சாத்விக், ஹேமானிகா, அவிஷ், றியானா, திசான் ஆகியோரின் அன்புப்பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
