திரு. சோமசுந்தரம் சிவபாதம்

சோமசுந்தரம் சிவபாதம்

தோற்றம்: 09 ஏப்ரல் 1958 - மறைவு: 15 நவம்பர் 2021

யாழ். வேலனை கிழக்கு 3ம் வட்டாரம் தவிடுதின்னி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவபாதம் அவர்கள் 15-11-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவமணி தம்பதிகளின் சிரேஸ்ட மகனும்,
 
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கனகாம்பிகை தம்பதிகளின் மருமகனும்,
 
கிருஸ்னமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
 
நிலூசா (வவுனியா), நிர்திகா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
நிர்மலன் (டென்மார்க்), நிர்மலா (பிரான்ஸ்), யோகராஜா (நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
வைத்தியகலாநிதி கோணேஸ்வரன் (வவுனியா), துஸ்சியந்தன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,
 
சுகிர்தனன், சுகிர்தனா, சுவிர்தன், பிரணவி, ஐஸ்ஷாரன், விபீஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2021 புதன்கிழமை அன்று 10:00 மணியளவில் 5ம் ஒழுங்கை பட்டக்காடு(6ம் ஒழுங்கை முடிவு வேப்பங்குளம்) வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2021 12:53)