திரு. சோமசுந்தரம் யோகேஸ்வரன் (இந்திரன்)
தோற்றம்: 17 ஜூன் 1960 - மறைவு: 27 மே 2026
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் யோகேஸ்வரன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு சோமசுந்தரம் - பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - கந்தசாமி - ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உதயராணி அவர்களின் கணவரும்,
அபினா, நிரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அகிலன், கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கண்ணா, யாதவா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
நிஹாஷ்யியின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்சாலை (Jayaratna Parlour) துயர்த் தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து மாலை 4.45 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
