திருமதி. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி (ஏலோகரம்பை)

சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி (ஏலோகரம்பை)

மறைவு: 21 ஏப்ரல் 2024

யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையை பிறப்பிடமாகவும், சாத்தாவத்தை வைரவர் கோவிலடி மூத்ததம்பி வீதீ  மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார். ​

அன்னார், காலஞ்சென்ற நாகமணி - சுகிர்தவதியம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

திரு. வல்லிபுரம் சோமசுந்தரம் (சாமாதான நீதவான், ஓய்வுபெற்ற கணக்காளர் - சீமேந்து கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரன் (ஓய்வுபெற்ற நில அளவையாளர்), காலஞ்சென்ற இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, வடிவேஸ்வரன் (உதவி பாதுகாப்பு உத்தியோகத்தர் - சீமேந்து கூட்டுத்தாபனம்)  ஆகியோரின் பாசமிகு  சகோதரியும்,

கிருஷ்ணதாஸ் (ஆசிரியர்), ரூபதாஸ் (கனடா- முன்னாள் PHI), விமலதாஸ் (மென்பொருள்  வடிவமைப்பாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று  பில்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2024 00:00)