திருமதி. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி (ஏலோகரம்பை)
மறைவு: 21 ஏப்ரல் 2024
யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையை பிறப்பிடமாகவும், சாத்தாவத்தை வைரவர் கோவிலடி மூத்ததம்பி வீதீ மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் ஜெகதீஸ்வரி அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமணி - சுகிர்தவதியம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
திரு. வல்லிபுரம் சோமசுந்தரம் (சாமாதான நீதவான், ஓய்வுபெற்ற கணக்காளர் - சீமேந்து கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரன் (ஓய்வுபெற்ற நில அளவையாளர்), காலஞ்சென்ற இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, வடிவேஸ்வரன் (உதவி பாதுகாப்பு உத்தியோகத்தர் - சீமேந்து கூட்டுத்தாபனம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிருஷ்ணதாஸ் (ஆசிரியர்), ரூபதாஸ் (கனடா- முன்னாள் PHI), விமலதாஸ் (மென்பொருள் வடிவமைப்பாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பில்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org