திருமதி. சோதிராணி செல்வமாணிக்கம்

(ஓய்வுபெற்ற வைத்தியர்)

சோதிராணி செல்வமாணிக்கம்

தோற்றம்: 07 செப்டம்பர் 1933 - மறைவு: 30 ஜூலை 2025

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோதிராணி செல்வமாணிக்கம் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் - தங்கமுத்து தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற செல்லையா - பூபதி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற செல்வமாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுபச்செல்வி, சஞ்சயன் (நோர்வே), சஞ்சீவ் (இங்கிலாந்து), காயத்திரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

கார்த்தியாயினி, யசோதை, பரணிதரன் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராணி, பஷ்பராணி, ராஜசிங்கம், சந்திரராணி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சரஸ்வதி மற்றும் ஞானமலர் ஆகியோரின் மச்சாளும்,

காவியா, Max, அட்சயா, சாய்மதுரா, புருஷோத்தமன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

ரஞ்சினி, குகமோகன், கணேசன், உஷா, நடேசன் ஆகியோரின் அன்ரியும்,

தமயந்தியின் மாமியும்,

காலஞ்சென்ற மனோரஞ்சன், சாந்தி, ராஜினி, முத்துக்குமார், சுதர்ஷனா, யோகேந்திரபிரசாத், சுதர்ஷி, பிரியதர்ஷினி, செல்வநாதன் ஆகியோரின் மாமியும்,

குகன்னியா, குகலவன் ஆகியோரின அம்மம்மாவும்,

புட்டப்பிள்ளைகளின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நிகழ்வுகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் உடலம் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2025 04:00)