திருமதி. சோதிமணி சோமஸ்கந்தா
தோற்றம்: 10 ஜூன் 1964 - மறைவு: 12 டிசம்பர் 2023
யாழ். சுழிபுரம் கிழக்கை பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா் திருமதி சோதிமணி சோமஸ்கந்தா அவர்கள் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் (பெத்தப்பா) கதிராசிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், S.K.சுப்பிரமணியம் (அமரர்), மற்றும் சர்வேஸ்வரி அவர்களின் மூத்த மருமகளும்,
அன்னார், சுப்பிரமணியம் சோமஸ்கந்தா அவர்களின் அன்பு மனைவியும்,
டிசானியின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான உலகநாதன், ராஜேஸ்வரி, ஜெகசோதிநாதன், சபாநாதன் மற்றும் மனோன்மணி, சராநாதன், ஞானசொரூபமணி, கைலாயநாதன், தேவலோகமணி, பரஞ்சோதிநாதன், சோதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தா, மகாஸ்கந்தா, சுரேஸ்கந்தா மற்றும் சுகந்தி ஆகியோரின் அன்பு அண்ணியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-12-2023 வியாழக்கிழமை காலை 8.30 மணிமுதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மதியம் 2.0 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
