Mr. Sozhan Sivakumar
Date of Birth: 09 February 1967 - Deceased: 19 May 2024
பெனிஹெல, வரக்காப்பொலை, கேகாலையைப் பிறப்பிடமாகவும், தெகிவளை களுபோவிலயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோழன் சிவகுமார் அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோழன் - வீரமலை பொறக்கிளி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பெரியசாமிப்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி (ஆசிரியர்- கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக்கணவரும்,
ஹரிகிரிஷாந்தன், திலூஷனி, லிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேகனேஸ்வரி, சரோஜாதேவி, நந்தகுமார் () ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற நல்ல சேவுகன், சிவகுமார், சீத்தாஜெயந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 21-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று Supreme Funeral Parlour (No-02, Elvitigala Mw, Colombo-05)இல் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 22-05-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
