திருமதி. ஸ்ரீ சூரியபகவதி குமரகுரு
தோற்றம்: 14 ஜூன் 1945 - மறைவு: 11 செப்டம்பர் 2025
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீ சூரியபகவதி குமரகுரு அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - செல்லம்மா தம்பதிகயினரின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரன் - கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமரகுரு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற காவஸ்கர் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடேசன், இராஜரத்தினம், சரோஜினி, சந்திரசேகரம், இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 15.09.2025 திங்கட்கிழமை அன்று காலை 08:30 மணியளவில் இல- 288, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, கெலன் தோட்ட Assemble Of God சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
