திருமதி. சிறீதரன் சாரதாதேவி
தோற்றம்: 12 டிசம்பர் 1951 - மறைவு: 30 ஜூலை 2026
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், மட். ஏறாவூர், சென்னை (இந்தியா), மட்டுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிறீதரன் சாரதாதேவி அவர்கள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று மட்டுவிவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. சோமசுந்தரம் (இளைப்பாறிய ஆசிரியர்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி. வெற்றிவேல் - இரத்தினம் தம்பதியினரின் ஆசை மருமகளும்,
சிறீதரனின் அன்பு மனைவியும்,
இயக்குனர் சோமிதரன் (இந்தியா), சிறிஜா (ஜேர்மனி), சிந்துஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் மட்டுவிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
