திருமதி. ஸ்ரீகமலாதேவி கைலாசபதி
தோற்றம்: 05 ஏப்ரல் 1951 - மறைவு: 15 ஜனவரி 2025
யாழ். வண்ணார்பண்ணை கிழக்கு, சீனியர் லேன், கலட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீகமலாதேவி கைலாசபதி அவர்கள் 15-01-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கைலாசபதி (பதியண்ணை, சண்முகா ஜூவல்லரி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பாலமயூரன், பிரதீபா, கிரிஷாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குருதாரணி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லிகிதன், அதிதன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
காலஞ்சென்ற ஸ்ரீலங்காதேவி, ஸ்ரீஇந்திராதேவி, ஸ்ரீசுசிலாதேவி, விவேகானந்தன், சகுந்தலாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
கலைமகள், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற நாமகள் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் சீனியர் லேன், கலட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
முகவரி:-
இல-49/ 8, சீனியர் லேன்,
கலட்டி.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
