திருமதி. சிறிகாந்ததாசா அருந்தவநாயகி (தவம்)
தோற்றம்: 01 பெப்ரவரி 1958 - மறைவு: 04 பெப்ரவரி 2023
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறிகாந்ததாசா அருந்தவநாயகி அவர்கள் 04-02-2023 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் இராஜலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறிகாந்ததாசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சரண்யா, சாமியன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தினேஷ், சம்யுக்தா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நாகேஸ்வரன் (ராசா- மல்லாகம்), காலஞ்சென்றவர்களான வேலாயுதம் (சந்து- அச்சுவேலி), தம்பிராசா (சொக்கு- மல்லாகம்) மற்றும் சிவபாதம் (சிவம்- கிளிநொச்சி), கணேஸ்வரன் (கணேஸ்- மல்லாகம்), திருச்செல்வம் (செல்வம்- பத்தமேனி), செல்வராணி (ராணி- மல்லாகம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குகதாசன் (சாவகச்சேரி), கற்பவவல்லி (ஜேர்மனி), ரஞ்சினி (ஜேர்மனி) காலஞ்சென்ற குகநேசன் (சாவகச்சேரி), மோகனதாசன் (கனடா), சகலகலாவல்லி (லண்டன்), பேரின்பதாசன் (சாவகச்சேரி), கலைவாணி (ஜேர்மனி), கிருஷ்ணதாசன் (ஜேர்மனி), குகலோகநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
டிலக்சனா, சாருகான், தனிஷா, சாமிரன், சச்சின், சாமியன், ஸ்றேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
