திருமதி. ஶ்ரீவாலாம்பிகை சிவபாலன்
தோற்றம்: 06 நவம்பர் 1956 - மறைவு: 23 அக்டோபர் 2023
வல்வெட்டியை பிறப்பிடமாகவும், சமீபகாலமாக கீரிமலை தொல்புரம் சிவபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஶ்ரீவாலாம்பிகை சிவபாலன் 23-10-2023 அன்று காலமானார்.
அன்னார் கனகசபை சிவபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ் சென்றவர்களான கதிர்காமத்தம்பி, மாதேவிப்பிள்ளை தம்பதியினரின் அன்பான சிரேஷ்ட புத்திரியும்,
புவனா ஜெயந்திரனின் அன்பு அக்காவும், ஜெயந்திரனின் அன்பு மைத்துனியும்,
காலஞ் சென்ற பாலகுமாரின் அன்பு அக்காவும்,
காலஞ் சென்றவர்களான கனகசபை, இராசம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
அமரர் சம்புநாதபிள்ளை, சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிவசக்தி, முத்துக்குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலாநிதி, தயாபரன், குருபரன், கிருபாநிதி, சொருபாநிதி, இரகுபரன், சிவநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வைற்கவுஸ் அந்தியகால சேவை நிலயம், 181 பிரதான வீதி யாழ்ப்பாணத்தில் உள்ளது. காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பார்வையிட முடியும்.
27 அக்டோபர் 2023 (27-10-2023) வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணிக்கு அதே இடத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும். தொடர்ந்து கொம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
www.tamilthakaval.org
