திரு. சிற்றம்பலம் வாமதேவன்
(Former Proof Reader Dept. Of Got Printing)
தோற்றம்: 07 மார்ச் 1939 - மறைவு: 01 நவம்பர் 2024
பர்மாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஓட்டுமடம், நுணாவில் கிழக்கு சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், தற்சமயம் வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிற்றம்பலம் வாமதேவன் அவர்கள் 01-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம்-சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற செல்லப்பா-கனகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாவித்திரி (ஓய்வுபெற்ற ஆசிரியை-மகளிர் கல்லூரி-சாவகச்சேரி பரிதோமா கனிஷ்ட பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
வத்சலா (கனடா), அகிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆதவன் (கனடா), Dr. ஶ்ரீசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரனேஷ், விக்னேஷ், ஹரிணி, கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பாலாம்பாள் மகாதேவன், சகாதேவன், ராஜதேவன் மற்றும் நீலாம்பாள் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
