திரு. சுப்பிரமணியம் ஜெயரத்தினம்
தோற்றம்: 05 பெப்ரவரி 1947 - மறைவு: 09 ஆகஸ்ட் 2024
யாழ்.கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் ஜெயரத்தினம் அவர்கள் 09-08-2024 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-மாமாங்கம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகநாதன்-சிவனேசாம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தவராணி (சித்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயப்பிரதாபன் (கண்ணன், முன்னாள் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்- நீதிவான் நீதிமன்றம் பருத்தித்துறை/ ஊர்காவற்துறை, சட்ட உத்தியோகத்தர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வவுனியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சட்டத்தரணி காயத்திரி (நீதிமன்ற உரை பெயர்ப்பாளர், நீதிவான் நீதிமன்றம், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மாமனாரும்,
மாகாலிங்கம் (லண்டன்), மகேந்திரராணி, சிவநாதன், பவளராணி, காலஞ்சென்ற சிவபாலன் மற்றும் புஸபராணி ஆகியோரின் அருமைச் சகோதரனும் ஆவார்.
அன்னாரரின் இறுதிக்கிரியைகள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை மு.ப.11:00 மணியளவில் நகுலேஸ்வரம் வீதி, கருகம்பனைச் சந்தியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக கீரிமலை, செம்பொன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
முகவரி:-
நகுலேஸ்வரம் வீதி,
கருகம்பனை, கீரிமலை.
www.tamilthakaval.org
