திரு சுப்பிரமணியம் உதயகுமார்
(உதயாஸ் மணிக்கூட்டு நிறுவனம்- வவுனியா உரிமையாளர்)
தோற்றம்: 28 பெப்ரவரி 1968 - மறைவு: 29 ஏப்ரல் 2022
வவுனியா மரக்காரம்பளையைப் பிறப்பிடமாகவும், யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், வவுனியா தோணிக்கல் குட்செட்றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் உதயகுமார் அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷன், சிந்துஜன், பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம் மற்றும் முத்தம்மா, ஈசக்கிமுத்து, ராஜன், பார்வதி, காலஞ்சென்ற உதயகுலசிங்கம் மற்றும் ஞானம்மா, தேவிகா, உதயபாலன், உதயச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவராமவதி, சிவசுந்தரம், காலஞ்சென்ற யோகராசா, இந்திராணி, காலஞ்சென்ற சிவராசா மற்றும் சண்முகரெத்தினம், பாஸ்கரன் மற்றும் தங்கம், திருஞானம், கெளரி, சிவனேசன், புஸ்பராணி, சிவா, அருட்செல்வர், மஞ்சுளா, நிர்த்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சித்திரவடிவேல், ஜெயஈஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பராசா, தவமலர், மங்களராணி, சுகந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
