Mrs. Subramaniam Thavamani
Date of Birth: 20 August 1953 - Deceased: 25 November 2024
யாழ். காரைநகர் சக்கலாவோடையை பிறப்பிடமாகவும், இல-109,4/1, புதுச்செட்டி தெரு, கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் தவமணி அவர்கள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை-செல்லம்மா (கடைக்கார ஐயம்பிள்ளை) தம்பதியினரின் அன்பு மகளும்,
கந்தையா-சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்ஷன் (வெண்பா பிரைவேட் லிமிடெட்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
Dr. செல்வரட்ணம், கணேசு, காலஞ்சென்றவர்களான சோதிநாதன், ஏகாம்பரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஷியாமளா, ராகவன், Dr. சிவசுகந்தன், கிரிஜா, ரூபி, கண்ணம்மா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 28-11-2024 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.10 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
