திரு. சுப்பிரமணியம் அருள்குமார்
தோற்றம்: 09 ஜனவரி 1975 - மறைவு: 15 நவம்பர் 2025
இல-287 1/5, மோதரை வீதி, கொழும்பு-15 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சுப்பிரமணியம் அருள்குமார் அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (முன்னாள் பங்காளி - கிரவுண் டிரேடர்ஸ், யுனைட்டட் ஸ்டோர்ஸ்) - தவமணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
சுவேந்திரா தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தயானி, தீபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஸ்குமார் (இலண்டன்), ரஞ்ஞனி (நாவலை) ஆகியோரின் சகோதரனும்,
சுஜீத், யசீவன் (இலண்டன்) ஆகியோரின் சித்தப்பாவும்,
மேகலா, சங்கர்நாராயணன் ஆகியோரின் மைத்துனரும்,
வர்ஷா, வித்தால், வடஸன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
