திருமதி. சுப்பிரமணியம் சின்னம்மா
(ஓய்வு பெற்ற ஆசிரியை)
தோற்றம்: 16 செப்டம்பர் 1932 - மறைவு: 20 மே 2026
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் சின்னம்மா அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராஜன் (கனடா), புஸ்பராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குலேந்திரன், சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமலன், அனிந்தா ஆகியோரின் அம்மம்மாவும்,
நிரோஜன், நிலக்சன், நிரூபன் ஆகியோரின் அப்பம்மாவும்,
ஏகன், யாலன், அமாரியன், மிராணி, ஆராதியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் "கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்" அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
K.குலேந்திரன் (மருமகன்):- +94 77 731 6605
www.tamilthakaval.org
