Late. Subramaniyam Nagamma

Subramaniyam Nagamma

Date of Birth: 03 September 1924 - Deceased: 17 September 2024

யாழ். காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், கோவளம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். சுப்பிரமணியம் நாகம்மா அவர்கள் 18-09-2024 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு-பார்வதி தம்பதியினரி அன்பு மகளும்,

அருணாச்சலம் அன்னபூரணம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பாக்கியம், பேரம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,

தேவராசா, கெங்காதரன், சோமசேகரன், தவமணி, தவராசா, காலஞ்சென்றவர்களான தேவி, அமிர்தலிங்கம் ஆகியோரின் பெரியம்மாவும்,

விஜலக்சுமி, தனலக்சுமி, குணலிங்கம், செல்வலக்சுமி, காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், ஜெயலக்சுமி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 18-09-2024 புதன்கிழமை முதல் SK Elders Home, Malayalapuram, Kilinochchi எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் அன்னாரின் காரைநகர், மணற்பிட்டி இல்லத்தில் ‎நடைபெற்று, சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2024 04:00)