திரு. சுப்பிரமணியம் இராசேஸ்வரன்

(கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்)

சுப்பிரமணியம் இராசேஸ்வரன்

தோற்றம்: 15 நவம்பர் 1963 - மறைவு: 06 செப்டம்பர் 2025

யாழ். வடமராட்சி, சீனாப்புலம் நெல்லியடி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இராசேஸ்வரன் அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் - பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஸ்ரீராகினி (ஆசிரியை - யாழ். கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

அஸ்வின் (யாழ். இந்துக் கல்லூரி), அகிலாஸ் (யாழ். அத்தியார் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அருமைநாயகம், விக்கினேஸ்வரன், இராசமலர், மகேஸ்வரன், சோதிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தி, காலஞ்சென்றவர்களான சந்திரராணி, இராசலிங்கம் மற்றும் இராஜபற்குணநாயகி, ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீரதி, ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீவரதராஜன், ஸ்ரீகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2025 04:00)