திரு. சுப்பிரமணியம் செல்வரத்தினம்

(ஓய்வு பெற்ற ஆசிரியர் - இ,கி.ச. இந்துக்கல்லூரி, திருகோணமலை)

சுப்பிரமணியம் செல்வரத்தினம்

மறைவு: 12 மார்ச் 2025

யாழ். காரைநகர் புதுரோட்டை பிறப்பிடமாகவும், திருகோணமலை, சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் செல்வரத்தினம் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஈஸ்வரன், Dr. அஜந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிருஷ்ண ஜெயந்தி, Dr. ரகுபரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லக்‌ஷிமிப்பிரதா, கார்த்திகேயன், ஸ்ரீபூர்ணா, துவாரகா, கீர்த்திகன் ஆகியோரின் ஆருயிர் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசைய்யா மற்றும் சரஸ்வதி, நடராசா, பாக்கியம், இராணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-03-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 7:00 மணி வரை Liberty Funerals Granville (101 South St, Granville NSW 2142) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு. 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை 10:30 மணியளவில் Rookwood crematorium (Memorial Avenue, Rookwood) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/03/2025 04:00)