திரு. சுப்பிரமணியம் சிவகுமார்

(ஓய்வுபெற்ற சிறாப்பர் - யாழ் மாநகரசபை)

சுப்பிரமணியம் சிவகுமார்

மறைவு: 06 ஜனவரி 2025

யாழ். நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவகுமார் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - மகேஸ்வரி தம்பதியினரின் நான்காவது புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (சின்னத்தம்பி) - பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,

சோதிமலர் (குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

வினோத்குமாரின் (பிரான்ஸ்) அன்புத் தந்தையும்,

லக்ஷிகா (பிரான்ஸ்) இன் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அரசகுமார் (சுவிஸ்), பத்மகுமார் (கொழும்பு), காலஞ்சென்ற நந்தகுமார் (பிரான்ஸ்), சாந்தினி (கனடா), விசியகுமார் (டென்மார்க்), சந்திரகுமார் (நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வரதராசா (சுவிஸ்), ருக்குமணிதேவி, குமுதினி, கமலினி (சுவிஸ்), காலஞ்சென்ற கமலாம்பிகை, ராஜினி (பிரான்ஸ்), பரமேஸ்வரன் (கனடா), சாமினி (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரதி (சுவிஸ்), இராஜசிவம் (சுவிஸ்), சண்முகதாஸ் (சுவிஸ்) ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற அப்பாத்துரை (கிராமசபைத் தலைவர்)-சொர்ணம்மா  தம்பதியினரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது  இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

இராஜவீதி, நீர்வேலி வடக்கு.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2025 05:00)