திரு சுப்பிரமணியம் திருநாவுக்கரசு (துரை)
(இளைப்பாறிய இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர் (CEB))
தோற்றம்: 18 நவம்பர் 1942 - மறைவு: 13 டிசம்பர் 2023
யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் திருநாவுக்கரசு அவர்கள் 13-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அமரசிங்கம் இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இந்திரபூபதி (இந்திராணி) அவர்களின் அன்பு கணவரும்,
கார்த்திகா, காயத்திரியின் பாசமிகு தந்தையும்,
விஜயராஜன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
நிருஜன், அனுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற செல்வராணி, லோகதாசன், காலஞ்சென்ற புஸ்பராணி, சிவதாசன், தில்லைநாதன், கருணாகரன், கருணாதேவி, யோகநாதன், ஜெயந்திராணி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
இராஜபூபதி, காலஞ்சென்றவர்களான சுந்தரராஜா, சிவநேசன், சிவலிங்கம் மற்றும் இரட்ணபூபதி, விமலா, ஜெயலிங்கம், விஜயலிங்கம், கல்யாணி, சாந்தி, திலகா, ரவிராஜன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-12-2023 சனிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 12.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்ப்பட்டு பிற்பகல் 1.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
