திருமதி. சுகிர்தபூஷணி சிவகுமாரவேலு
மறைவு: 06 ஜூன் 2024
கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தபூஷணி சிவகுமாரவேலு அவர்கள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினத்துறை சிவசேகரம்-நந்தவதி தம்பதியினரின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற வைத்தியர் வேலும்மயிலும் சிவகுமாரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
நாகநந்தினி, குமரேசன் ஆகியோரின் ஆசைத் தாயாரும்,
நாகேஸ்வரன், மயூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சின்மயி, கார்த்திகன் ஆகியோரின் பேரன்புமிக்க அம்மம்மாவும்,
காலஞ்சென்ற இரத்தினபாலேந்திரன், அருணாதேவி (வசந்தா), காலஞ்சென்ற சிவகரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சத்யதேவி, சரவணபவன் ஆகியோரின் மைத்துனியும்,
பவதக்ஷினி, குமரன், ஷிவாந்தி ஆகியோரின் மூத்த மாமியும்,
அபர்ணா, சாம்பவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
மதுரஹன், தேஜஸ், சாம்பவி, லவன், சுமுகன் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை சடங்குகளும், மத அனுஷ்டானங்களும் நடைபெற்று, 12.45 மணியளவில் புகழுடல் கோல்டர்ஸ் கிரீன் (லண்டன்) மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
