Mrs. Sugunavathy Selvanayagam
(Retired Labour Officer)
Date of Birth: 12 August 1939 - Deceased: 17 October 2024
யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகுணவதி செல்வநாயகம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசையா-லில்லி தெய்வானை இராசையா தம்பதியினரின் செல்வப்புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சவியல்பிள்ளை-றோஸ் ஜோன்பிள்ளை தம்பதியினரி அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரு.ஜோன்பிள்ளை இக்னேஷியஸ் செல்வநாயகம் அவர்களுடைய அன்பு மனைவியும்,
தெய்வேந்திரா (கனடா), காலஞ்சென்றவர்களான மகேந்திரா (இலண்டன்), ராஜேந்திரா (இலண்டன்), குலேந்திரா, புவனேந்திரா மற்றும் Dr. தர்மேந்திரா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ஜீலியன் றொஷானின் (இலண்டன்) அன்புத்தாயாரும்,
மரீனா ஜீலியன் (இலண்டன்) அன்பு மாமியாரும்,
எய்டன், ஈத்தன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் A.F.Raymond Funeral Directors, Raymond House (No-115, D.S.Senanayake Mw, Colombo-08) இல் 19-10-2024 சனிக்கிழமை மதியம் 1.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் மற்றும் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, பொரளை பொது மயான கிறிஸ்தவப் பிரிவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
