திருமதி. சுந்தரம்மா (கனகு)
தோற்றம்: 05 செப்டம்பர் 1949 - மறைவு: 26 பெப்ரவரி 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் ஒக்காரை புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சப்பாணிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. சுந்தரம்மா அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வெங்கடாசலபுர கிராமம் காலஞ்சென்ற வையாபுரிப்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலப்பிள்ளை - பொன்னம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
இராஜரட்ணம், கிரிஜா (ராணி), சர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (Trust Steels), மோகன்ராஜ் (Kotmalea Hardware - Thalawakkala), ஆகியோரின் மாமியாரும்,
தங்கராஜ் ( Ajantha Steels), செல்லையா, சதாசிவம் (Manec Hardware) ஆகியோரின் சகோதரியும்,
பெரியசாமிப்பிள்ளை, மனோன்மணி (திருச்சி), காலஞ்சென்ற தெய்வானை ஆகியோரின் அண்ணியும்,
பெரியண்ணன்பிள்ளை, விஜயலட்சுமி, பங்கஜம், ராணி மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற கந்தசாமிப்பிள்ளை - செல்லம்மாள், காலஞ்சென்ற நடேசபிள்ளை - சீதாலெட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,
திசானி, ரசிகா, யஸ்வந்த் ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-02-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் இல-168/8, பிக்கரிங்ஸ் ரோட், கொழும்பு-13 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-03-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, புகழுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
