திருமதி. சுந்தரலிங்கம் திலகவதியம்மை
மறைவு: 05 மே 2025
யாழ். காரைநகர், தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நாவாக்கண்டி மற்றும் கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரலிங்கம் திலகவதியம்மை அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிபிள்ளை (தலைப்பா) - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மகளும், காலம்சென்றவர்களான தங்கவேலு - லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சுசுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அருளாந்திசிவம், கனநாதன் (Quency distributors Colombo), சரோஜினி ஆகியோரின் அன்புத் தாயரும்
சௌந்தராம்பிகை (இலண்டன்), தர்ஷினி, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யதுர்சன், கீர்த்திகா, குயின்சி, மிதுலன், ரம்மியா, கஜன், சரண்யா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பார்வதியம்மை, கமலாம்பிகை மற்றும் கனகாம்பிகை ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தியாகலிங்கம், ஜெயசோதி மற்றும் கெங்காதரன், காலஞ்சென்ற சத்தியதேவன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் இல- 19 பின்டோ பிளேஸ், வெள்ளவத்தையில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
