திருமதி. சுந்தராம்பாள் நடராஜா நாயுடு

சுந்தராம்பாள் நடராஜா நாயுடு

தோற்றம்: 26 பெப்ரவரி 1941 - மறைவு: 06 மே 2024

பண்டாரவளை பூனாகலையைப் பிறப்பிடமாகவும், இல-53, அம்பதென்ன கார்டன், பண்டாரவளையை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. சுந்தராம்பாள் நடராஜா நாயுடு அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற E.R கோவிந்தசாமி நாயுடு தம்பதியினரின் அன்பு மகளும்,

 காலஞ்சென்ற இராஜகோபால் நாயுடு தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற இராஜகோபால் நடராஜா நாயுடு (முன்னாள் தொழிற்சாலை தலைமை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

ரகுபதி (முன்னாள் பண்டாரவளை மாநகர சபை பிரதி நகர பிதா), அசோகன் (லண்டன்), திலிப் கண்ணா (அமெரிக்கா), அகிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பானுமதி, சிவசக்தி, புஸ்பவள்ளி, சண்முகரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான R.G. கிருஷ்ணசாமி நாயுடு, R.G. பெருமாள் நாயுடு, R.G. நடராஜா நாயுடு, R.G. இராமையா நாயுடு, கிருஷ்ணம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அபிலாஷ், வினோஷா, ஹரீராம், கௌசல்யா, கிரிஷிக்கா, சரண்யா, பிரதோஷ், ரிஷிகேஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-05-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பண்டாரவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

இல-53, அம்பதென்ன கார்டன்,

பண்டாரவளை.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 344 8434

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2024 00:00)