திருமதி சுந்தரநாயகி நவரத்தினம்

சுந்தரநாயகி நவரத்தினம்

தோற்றம்: 27 ஏப்ரல் 1930 - மறைவு: 25 ஜனவரி 2024

யாழ். தம்பசிட்டி புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேர்னை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரநாயகி நவரத்தினம் அவர்கள் 25-01 2024ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் நவரத்தினம் (ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான இளங்கோவன், இளவதனி, இனவரதன், மற்றும் இளவேனி, இளவேந்தன், இளவரசன், சீலவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
இரத்னவதனா, திருஞானசம்பந்தன், சகுந்தலை, நளினி, துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான அமிர்தநாயகி, கணேசராசா, லோகநாயகி, குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சிவந்தினி, சிவயோகன், இந்திரஜித், கஜன், பிரணவி, வைஷ்ணவி, அர்ச்சனா, சாதனா, நர்மதா, பிரகலாதன் ஆகியோரின் அனபுப் பாட்டியும்,
 
சஞ்சன், சஜித்தா, ஹரிந்திரன், அர்ச்சுனன், நிவான், அபிநவ், பிரணவிஹரி ஆகியோரின் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-01-2024ம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கும் 11.30 மணிக்கும் இடையில் பாய்ட் சேப்பல் ஸ்பிரிங்வேல் மயானத்தில் நடைபெற்று அதனை தொடர்ந்து இந்து முறைப்படி தகனம் செய்யப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2024 11:48)