திரு. சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் (கரன்)
தோற்றம்: 21 ஜனவரி 1972 - மறைவு: 20 ஜூன் 2021
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை துவாரகாதரன் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை (வர்த்தகர்) சிவபாக்கியம் தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
கருணாகரன் (புங்குடுதீவு சந்தையடி மணியம் ஸ்ரோர்ஸ் முன்னாள் பிரபல வர்த்தகர்) சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆசினி, ஹரிணி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
கேசவராஜன், லிங்கராஜன், கேசவராணி (ராணி), பரமேஸ்வரன் (பாபு) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கலையரசி (கவிதா), முரளிதரன், நாவலன் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்), குணாளன், சுதாமதி, இராசேஸ்வரி, சிவராஜா (துனா), ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வேந்தன், கார்த்திகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
