திரு சுந்தரராஜா ஜெயராஜா

(முன்னாள் இலிகிதர், யாழ். நெசவாளர் கூட்டுறவு சங்கம்)

சுந்தரராஜா ஜெயராஜா

தோற்றம்: 27 செப்டம்பர் 1948 - மறைவு: 13 நவம்பர் 2023

யாழ். வண்ணார்பண்ணை பிரப்பங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரராஜா ஜெயராஜா அவர்கள் 13-11-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரதி அவர்களின் அன்புக் கணவரும்,

வாணி, சாரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன் மற்றும் உமாதேவி, விக்கினராஜா, குகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவபாலன் அவர்களின் அன்பு மாமாவும்,

கார்த்திகன், தட்சாயினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் 16-11-2023 வியாழக்கிழமை அன்று முற்பகல் 9.00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்:- பிள்ளைகள்


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2023 05:00)