திரு. சுப்பர் துரைசிங்கம்

(ஓய்வுநிலை அதிபர்,வலம்புரி பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர்)

சுப்பர் துரைசிங்கம்

தோற்றம்: 08 ஏப்ரல் 1939 - மறைவு: 14 டிசம்பர் 2022

யாழ் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும்,சுன்னாகம் கிழக்கை வசிப்பிடமாக கொண்டவரும் ஓய்வுநிலை அதிபர்,வலம்புரி பதுதிரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் திரு.சுப்பர் துரைசிங்கம் அவர்கள் 14-12-2022ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் நாகம்மா தம்பதியினரின்  மூத்த புதல்வரும்,
 
காலஞ்சென்றவர்களான இராசா சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
பட்டம்மாளின் அன்புக் கணவரும்,

மைதிலி,மாலி(லண்டன்),ஆதிரையான் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
 
சிவாகர் (துறைத்தலைவர் மற்றும் விரிவுரையாளர் மொரட்டுவைபல்கலைக்கழகம்),
மதுரிகா (லண்டன்),கோகிலவாணி (ஊடகவியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஜகேஸ்கர்,பவுத்திரி,ஜாதவா ஆகியோரின்  பாசமிகு பேரனும்,
 
சரஸ்வதி (சிங்கப்பூர்), கதிர்காமசிங்கம், புஸ்பவதி, முருகையா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
இராஜேந்திரம், காலஞ்சென்றவர்களான வசந்தி, இரத்தினம் மற்றும்  ஆனந்தராணி, கிருஷ்ணவேணி, வட்சலா, ரவிச்சந்திரன், பாலச்சந்திரன், உமாசந்திரன், குகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 15-12-2022ம்  திகதி வியாழக்கிழமை முதல் 18-12-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை வரை அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர்  18-12-2022ம் திகதி ஞாயிற்றுக்கழமை காலை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

விலாசம்:-

சுன்னாகம் கிழக்கு,

சுன்னாகம், யாழ்ப்பாணம் 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2022 02:27)