திரு. சுவாமிநாதர் செல்லப்பா

(இளைப்பாறிய வனத்துறை அதிகாரி)

சுவாமிநாதர் செல்லப்பா

தோற்றம்: 26 மார்ச் 1932 - மறைவு: 17 செப்டம்பர் 2024

யாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், சொய்சாபுர மொரட்டுவவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுவாமிநாதர் செல்லப்பா அவர்கள் 17-09-2024 செவ்வாய்கிழமை அன்று பறளாய் முருகன் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா- வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மகனும்,  காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை-தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதியம்மா அவர்களின் அன்பான துணைவரும்,

ஸ்ரீகாந்தன் (USA), ஜெயகாந்தன் (Canada) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

சுபானி, பொற்கவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ச்சனா, அபிர்னா, அபிஷா, அனுஷன் ஆகியோரின் பாசமுள்ள அப்பப்பாவும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற தவச்செல்வம்ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சீவரத்தினம் (USA), காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, திருச்சிற்றம்பலம், மகேஸ்வரி, வேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 25-09-2024 புதன்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, நண்பகல்   12:00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  ஸ்ரீகாந்தன் (மகன்-USA)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2024 19:22)