திரு. சுவாம்பிள்ளை தேவராசா

(தலைவர் மல்லாகம் சன்மார்க்க சன சமூக நிலையம், முன்னாள் முகாமையாளர் L.I.C காப்புறுதி)

சுவாம்பிள்ளை தேவராசா

தோற்றம்: 19 ஜூலை 1967 - மறைவு: 02 ஜனவரி 2022

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை தேவராசா அவர்கள் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைப்பதம் அடைந்தார்.

அன்னார், சுவாம்பிள்ளை, காலஞ்சென்ற மேரிலுவிசா தம்பதிகளின் அன்பு மகனும்,

சிங்கராசா, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெனிஸ் மலசோதி (ஆசிரியர்- யா/ குளமங்கால் றோ.க.த.க பாடசாலை) அவர்களின் பாசமிகுக் கணவரும்,

ஜெலான் (Business Manager யாழ்ப்பாணம் அலியான்ஸ் கம்பனி), பர்வின் அபிசேக், பிரவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சகாயராசா (கத்தோலிக்க பாட ஆசிரிய ஆலோசகர் I.S.A), பாக்கியராசா, யோகராசா (ஸ்ரீலங்கா கம்பனி இன்சுரன்ஸ்), சிங்கராசா (ஆசிரியர்- யா/ விக்னேஸ்வரா கல்லூரி), விமலராசா (ஐக்கிய அமெரிக்கா), கமலராசா, காலஞ்சென்ற ஆனந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருளப்பு, ஞானப்பிரகாசம் (லண்டன்), செல்வராசா, அமலசோதி, பாக்கியநாதன் (சுவிஸ்), இராசேந்திரம், துரைசிங்கம், பீற்றர் றெக்வூட் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 03-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் குளமங்கால் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2022 11:45)