பிரம்ம ஶ்ரீ. தியாகராஜசிவ ஐயர் குமாரசதாசிவ சர்மா

(ஓய்வு நிலை புகையிரத நிலைய அதிபர்)

தியாகராஜசிவ ஐயர் குமாரசதாசிவ சர்மா

தோற்றம்: 06 நவம்பர் 1943 - மறைவு: 13 ஏப்ரல் 2024

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ப்ரம்மஸ்ரீ தி. குமாரசாதாசிவ சர்மா அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், வித்யாதரிசி, முகாந்திரம் ஸ்வர்க்கஸ்ரீ சதாசிவ ஐயர் (முன்னை நாள் கல்வி அதிகாரி - கல்வித் திணைக்கள பரிசோதகர்) தம்பதியினரின் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான தியாகராஜசிவ ஐயர் - இராசலட்சுமி அம்மா தம்பதியினரின்  புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியசர்மா - விமலாதேவி அம்மா தம்பதியினரின் மருகனும்,
 
கமலாதேவி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற கணேஸ்வரசர்மா, நாகரத்தினம் (சுன்னாகம்), காலஞ்சென்ற சரவணபவசர்மா, சுலோசனா (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஶ்ரீதரசர்மா, கிருபாகரசர்மா (யாழ்ப்பாணம்), வசந்தி (வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
பாலரூபசர்மா (இலங்கை மின்சாரசபை-சுன்னாகம்), திவாரக்குருக்கள் ஆகியோரின் அருமைத் தந்தையாரும்,
 
நித்தியகல்யாணி, கௌசல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அபிநயன், ஹர்ஷிதா ஆகியோரின் பேரனும் ஆவார்.
 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழம அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் புகழ் உடல் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/04/2024 00:00)