திரு, த. சோமசுந்தரம்
மறைவு: 20 மார்ச் 2024
இந்தியா திருச்சி மாவட்டம், தெற்கு சிறுபத்தூர் கிராமம், கண்டி தலாத்து ஓயா வசிப்பிடமாகவும் கொண்ட திரு. த. சோமசுந்தரம் அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தவசியாபிள்ளை - வேலூரம்மாள் தம்பதியினரின் மகனும்,
வத்துகாமம் அடைக்கம்பட்டி கிராமம் காலஞ்சென்ற சுப்புரத்தினம்பிள்ளை - முத்துலட்சுமி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
திருமதி. சோ. திலகமலர் அவர்களின் அன்புக்கணவரும்,
பெரியண்ணன் அதிலாஷ், திருமதி. அகல்யா, செல்வி வர்ஷன்யா ஆகியோரின் அன்பு தந்தையும்,
திரு. அருண்பிரசாத் (பண்டாரவளை) அவர்களின் மாமனாரும்,
தீரனின் அன்பு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான பெரியண்ணன்பிள்ளை, தேவராயபிள்ளை, மற்றும் சடையாபிள்ளை, காலஞ்சென்ற அருணாசலம் பிள்ளை, சிவலிங்கம், கந்தசாமி, காலஞ்சென்ற காமாட்சியம்மாள், மீனாம்பாள், தெய்வானை, மகேஷ்வரி, தனலட்சுமி, மல்லிகா, ரேணுகாதேவி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை, தைலான்பிள்ளை, கந்தசாமிபிள்ளை, சோமசுந்தரம், சுந்தரம், சதாசிவம், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதபாலன், அழகுராணி (புசல்லாவ) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-03-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இல. 133, பகலவத்தை, சின்னாறுகாமம், தலாத்து ஓயா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-03-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 1.00 மணியளவில் அம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
