திருமதி. தையல்நாயகி செல்வராஜா (நளினி)
தோற்றம்: 25 மே 1947 - மறைவு: 07 பெப்ரவரி 2025
யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், இல-41, இன்னர் பெயார்லைன் வீதி, தெகிவளை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தையல்நாயகி செல்வராஜா அவர்கள் 07-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று இரவு இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - சீதாலட்சுமி தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற குலவீரசிங்கம் - பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா (கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்) அவர்களின் மனைவியும்,
ராஜ மனோகரன் (தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் - MTV Channel Pvt (Ltd)), Dr. சங்கீதா (General Practitioner. UK) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சஞ்ஜீவ், அனுஷ்யா ஆகியோரின் மாமியாரும்,
நேரியன், ஓவியா, யதுராஜ், அருண்ராஜ் ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன், சுப்பிரமணியம் மற்றும் சௌந்தரநாயகி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 10-02-2025 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
