திரு. தம்பையா கணபதிப்பிள்ளை
(ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினையர் - தும்பளை பருத்தித்துறை பிரதேச சபை)
மறைவு: 27 மார்ச் 2025
யாழ். மந்திகை, புலோலியை பிறப்பிடமாகவும், சாயி இல்லம், இமையாணன் மேற்கு, உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கணபதிப்பிள்ளை 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனின் திருப்பாதங்களை தழுவிக்கொண்டார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா-மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரிரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற நவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், பரராயசிங்கம், பூரணம், மகேஸ்வரி ஆகியோரின் சகோதரனும்,
யோகதர்சினி (நோர்வே), கருணைரூபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயகுமார் (வரணி), மாலதி (சாரையடி, புலோலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
திலக்சன், அபிசன், ஆதித்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-03-2025 வெள்ளிக்கிழமை முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் வல்லை இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
