திரு. தம்பையா கருணாமூர்த்தி

தம்பையா கருணாமூர்த்தி

தோற்றம்: 25 டிசம்பர் 1952 - மறைவு: 15 மார்ச் 2025

யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், மணியர்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கருணாமூர்த்தி அவர்கள் இன்று சனிக்கிழமை 15-03-2025 அதிகாலை யாழில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - முத்துப்பிள்ளை  தம்பதியினரின் அன்பு மகனும், கந்தையா - செல்லம்மா தம்பதியினரின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி (இரத்தினம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான தவமணி, மாணிக்கம், பரஞ்சோதி, இராசேஸ்வரி, தவராசா மற்றும் யோகேஸ்வரி (யோகம்-மணியர்குளம்), இன்பராணி (ராணி-மாதகல்) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, ஆறுமுகம், மார்கண்டு, பாலசுப்பிரமணியம் மற்றும் சின்னத்துரை (மணியர்குளம்), மகாதேவன் (தேவன்-மாதகல்), யோகபாக்கியம் (தேவி-மணியர்குளம்) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதகலில்  நடைபெற்று, புகழுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/03/2025 04:00)