திரு. தம்பையா மகாலிங்கம்

தம்பையா மகாலிங்கம்

தோற்றம்: 22 மார்ச் 1951 - மறைவு: 13 ஏப்ரல் 2024

யாழ். காரைநகர் முல்லைப்பிளவை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா மகாலிங்கம் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தம்பையா - மனோன்மணி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம்- தாட்சாயினி தம்பதிகளின் மருமகனும்,

நிர்மாலதேவி அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.

சுந்தராம்பாள் (இலங்கை), தியாகேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரி (கனடா), உருத்திரலிங்கம் (கனடா), சிவனேஸ்வரி (இலங்கை), கணேசலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
காலஞ்சென்ற தியாகராசா மற்றும் தங்கராசா, விக்னேஸ்வரி, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சதாசிவம் மற்றும் மோகனாம்பாள் காலஞ்சென்ற சுந்தரேசன் மற்றும் வசந்தராணி, காந்திமதி, உமாதேவி, செல்வராணி, அமுதராணி, இராஜகோபாலன், மகாலட்சுமி, ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் புகழ் உடல் பார்வைக்காக 18-04-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை Breidenbrucher Straße 10B 51674 Wiehl Deutschland வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/04/2024 00:00)