திரு. தம்பையா துரைராஜா
தோற்றம்: 26 ஆகஸ்ட் 1935 - மறைவு: 13 நவம்பர் 2025
யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், இல-131, இராஜ வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா துரைராஜா அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - தங்கம்மா தம்பதியினரின் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (மாஸ்டர்) - கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜினி (கனடா), ஸ்ரீசுபாஜினி (மட்டக்களப்பு), கோபிவதனன் (சாரங்கன் மல்டி சென்டர், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
துரைரட்ணம் (கனடா), கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராமி, அம்பிகை, அனந்தன் (கனடா), சாரங்கன், தீபானா ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவரகளான பரஞ்சோதி, அருளையா மற்றும் அன்னலட்சுமி, கணேசன், காலஞ்சென்ற ஶ்ரீகந்தராஜா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது யாழ். திருநெல்வேலி இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
