திரு. தம்பையா சுப்பிரமணியம்
மறைவு: 18 அக்டோபர் 2024
யாழ்.ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா சுப்பிரமணியம் அவர்கள் இன்று 18-10-2024 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா-பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலம்-நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இந்திராணியின் அன்புக் கணவரும்,
சர்மிலன் (இலண்டன்), துஷி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜேந்திரன், லோகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரதுஜா, பபிஷா, தாயகன், தாரகா, தாரகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, கந்தசாமி, மகேஸ்வரி, முருகேசு, செல்வராசா (ஆசை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மராணி, ஶ்ரீ (கனடா), சுகிர்தராணி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்,
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்திருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
www.tamilthakaval.org
