திரு. தம்பிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் (K.T)
(முன்னாள் தொலைத்தொடர்பு பொறியியலாளர் - யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார்)
தோற்றம்: 26 ஜூலை 1940 - மறைவு: 30 நவம்பர் 2022
யாழ். மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடம் உடுவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சற்குணதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதி (கனடா), பாலபாரதி (கனடா), பகீரதன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுந்தரம் (பிரான்ஸ்), அமுதலிங்கம் (துர்க்கா கவுஸ்- சுன்னாகம்), அன்னலச்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகுந்தலாதேவி, சுலோஜினி, கணபதிப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,
சிவகுமார், மோகனதாஸ், சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகனா, றொஜன், கௌசிகா, மாதங்கி ஆகியோரின் அன்புப் பேரனும்,
யோகராஜா, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தன்- தாரணி (இந்தியா), சுகந்- தனுஜா (பிரித்தானியா), Dr. நந்தகோபன் (வவுனியா) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் உடுவில் வீதி, மருதனார்மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இணுவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
