திரு. தம்பிப்பிள்ளை தனபாலா
(ஓய்வுபெற்ற அதிபர், BA (London))
தோற்றம்: 02 செப்டம்பர் 1940 - மறைவு: 29 ஜூலை 2024
யாழ். காரைநகர் வலந்தலையை (நெடுங்காடு) பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை தனபாலா அவர்கள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முத்துவேலு-தங்கமுத்து தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற அம்பிகை அம்மாவின் அன்புக் கணவரும்,
நித்தியலட்சுமி, வாமாதேவன், வரதராசன், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சுந்தரமூர்த்தி, செல்வலட்சுமி, கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசபூபதி, காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
