பிரம்ம ஶ்ரீ. தம்பிப்பிள்ளை கோபாலகிருஷ்ணன்

(கணக்காளர் - நல்லூர் கந்தசாமி கோவில்)

தம்பிப்பிள்ளை கோபாலகிருஷ்ணன்

தோற்றம்: 09 ஏப்ரல் 1957 - மறைவு: 17 டிசம்பர் 2025

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ. தம்பிப்பிள்ளை கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார்.

அன்னார், திலகவதி (யாழ். மாநகர சபை நூலகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சாரங்கன், பகீரங்கன் (கொமர்ஷல் வங்கி - வவுனியா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

கலைவாணி அவர்களின் அன்பு மாமனாரும்,

யாகவியில் அன்புப் பேரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிகிரியைகள் 19-12- 2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி வடக்கு சிவியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:-

காமாட்சி அம்மன் கோவிலடி,

நீர்வேலி வடக்கு.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2025 00:00)