Mr. Thambippillai Ponnuchsamy
Deceased: 11 May 2026
யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஒட்டறுத்தகுளம் வசிப்பிடமாகவும், வளநகர் மற்றும் இலண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினனின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இரத்தினம், பொன்னையா, கணேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசிங்கம், செல்வராசா, சித்திரா, கமலகாந்தன், மனோகரன், விமலா, இரவீந்திரன், கலாதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தமிழழகன், ரேணுகா, மீரா, சுசீலா, இராஜேஸ்வரி, ரகுநாதன், விஜயா, சிறீதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
"நினைவஞ்சலி"
எங்கள் குடும்பத்தின் ஆணிவேராய்,
அன்பின் உருவமாகவும், அமைதியின் நிழலாகவும் வாழ்ந்த
அன்புத் தந்தை திரு. தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி அவர்கள்
எங்களை விட்டு பிரிந்த செய்தி இன்னும் நெஞ்சை நொறுக்குகின்றது.
உங்கள் கரங்கள் எங்களைத் தாங்கிய நாட்கள்,
உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு வழிகாட்டிய தருணங்கள்,
உங்கள் பாசம் எங்கள் வாழ்வை ஒளிர வைத்த நினைவுகள் —
இவை அனைத்தும் இன்று கண்ணீராகவே மாறியுள்ளன.
வாழ்க்கையின் எல்லா சிரமங்களையும் அமைதியாகச் சுமந்து,
குடும்பத்தின் நலனையே உங்கள் சுவாசமாகக் கொண்டு வாழ்ந்தீர்கள்.
உங்களின் அன்பு அளவிட முடியாதது…
உங்களின் தியாகம் மறக்க முடியாதது…
“அப்பா” என்று அழைக்கும் அந்த ஒரு வார்த்தைக்குள்
எங்களுக்கு இருந்த பாதுகாப்பும், பாசமும், நம்பிக்கையும் இன்று வெறுமையாகிவிட்டது.
நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும்,
நீங்கள் கற்றுத்தந்த ஒழுக்கமும், அன்பும், மனிதநேயமும்
என்றும் எங்கள் வாழ்வில் உயிருடன் இருக்கும்.
உங்கள் சிரிப்பு இனி கேட்காது…
உங்கள் முகம் இனி காணாது…
ஆனால் எங்கள் ஒவ்வொரு மூச்சிலும்
உங்கள் நினைவுகள் என்றும் வாழும்.
கண்ணீருடன் விடைபெறுகிறோம் அப்பா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
“நீங்கள் மறைந்துவிடவில்லை…
எங்கள் இதயங்களில் என்றும் வாழ்கிறீர்கள்…”
***********
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ரகுநாதன் (மகன்):- +44 777 414 1920
இராஜேஸ்வரி (மகள்):- +94 77 695 7490
ரேணுகா (மகள்):- +41 78 235 2208
விஜயா (மகள்):- +45 3014 5218
சிறீதரன் (மகன்):- +33 76 444 0505
சுசீலா (மகள்):- +1 647 534 7391
www.tamilthakaval.org
